Wednesday, November 21, 2012

காஸாவிலிருந்து வரைகிறேன்....!


காட்டுத்தீயாய் நாளும்
செய்திகள்....!
எனது இந்தச் செய்தியை

காட்டுத்தீபோலும் சொல்லுங்கள்...!
காஸாவிலிருந்து உலக மக்களுக்கு,
----------------------
நாங்கள் கணக்கிடப்படாத
கணக்குகளே அல்ல!
நாங்களும் மாந்தர்கள்தாம்
கடவுள்மீது சத்தியம் சொல்லி
கூறுகிறேன்....
எங்களுக்கும் பெயர்கள் உண்டு!
எங்களுக்கும் பிள்ளைகள் உண்டு
எங்களுக்குள்ளும் உணர்வுகள் உண்டு!
எல்லா மூச்சுக்காற்றுக்கும் வரலாறு உண்டு
நாங்களும் உங்களைப் போலவே
அடுத்தவர்களைப் போலவே
மக்கள்தாம்!
நாங்கள்
செய்திகளும்,மரணங்களும் அல்ல!
நாங்கள்
செய்திகளும், மரணங்களும் அல்ல!

தமிழில்: கலைமகன் பைரூஸ்
2012/11/21 9:18

No comments:

Post a Comment